Yesuvukkaai Thondu Seythisavae Song Lyrics
Yesuvukkaai Thondu Seythisavae Tamil Christian Song Lyrics.
Yesuvukkaai Thondu Seythisavae Christian Song in Tamil
இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமின் னானிலத்தில் வருதே
1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசி வரை
2. பாவத்தில் மா ஜனம் அழிகிறது
லோகத்தின் ரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்
3. மேகத்தில் இயேசு தான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம்
