Yesu Pirandhaar Christmas Song Lyrics
Yesu Pirandhaar Tamil Christmas Song Lyrics Sung By. Jeswin Samuel.
Yesu Pirandhaar Christian Song Lyrics in Tamil
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீர் (2)
உம்மை போல உலகில் யாரும் இல்லையே
உம்மை பாடி போற்றி உயர்த்திடுவேன் …. (2)
இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
உயிர்த்து எழுந்தார் எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே (2)
1. எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
என்னை காக்கும் தெய்வம் நீர்
நான் உம்மை பாடி உம்மை போற்றி
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் (2)
பாவியான என்னை மீட்டவரே
உம்மை போல் இவ் உலகில் யாரும் இல்லையே
இயேசு பிறந்தார் சிலுவை சுமந்தார்
உயிர்த்து எழுந்தார் மீண்டும் வருவார்
