Adhisayar Yesu Song Lyrics

Adhisayar Yesu Arpudam Yellam Tamil Christian Song Lyrics.

Adhisayar Yesu Christian Song in Tamil

அதிசயர் இயேசு அற்புதம் எல்லாம்
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு
என்னரும் அற்புதம் செய்தார் அதிசயம் அதிசயம்

1. கானாவூர் திருமண வேளையின் போது
நீரை திராட்ச ரசமாய் மாற்றி – 2
விருந்தினார் அருந்த மகிமை செய்தார்
விந்தையை எண்ணிய மக்கள் வியந்தனர்

2. ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐந்து ஆயிரம் பேருண்ணச் செய்தார்
குருடர் செவிடர் வியாதி கண்டோர்
குறைதனை நீக்கியே அருளினை செய்தார்

3. மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார்
மகிமை தேவன் கிருபையைக் கண்டார்
பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி
நாமும் செல்வோம் அவர் வழி நடந்து

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post