Inba Thunba Nerathilum Un Lyrics

Inba Thunba Nerathilum Un Tamil Christian Song Lyrics.

Inba Thunba Nerathilum Un Christian Song in Tamil

இன்ப துன்ப நேரத்திலும் உன்
அன்புள்ள இயேசுவைப் பார்

1.இன்பத்தினால் அகமகிழ்ந்து
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில்
சிக்கிக்கொண்டு இருக்கும் போதும்

2. சோதனையால் பிடிபட்டு
இடுக்கண்ணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும்

3.தோழரால் பகைக்கப்பட்டு
மனகிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை விட்டோடும் போதும்

4.அவர் தாமே சோதிக்கப்பட்டு
பாடு நமக்காய் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும்
நமக்கு உதவி செய்ய வல்லவராம்

5.வறுமையினால் யாசித்து
பாடு மிகப்படும் போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும்

6.கடுநோயால் பெலன் குன்றி
பெவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும்

7.பகைஞரால் கல்லெறியுண்டு
மரண நேரம் கிட்டும்போது
பக்தன் ஸ்தேவானைப் போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார்

8.நான் என் இயேசுவின் தரிசனத்தை
நிமிஷந் தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள்
என்றவர் என்னை தேற்றுகிறார்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post