Mutham Seiya Vandhirukaen Song Lyrics

Mutham Seiya Vandhirukaen Tamil Christian Song Lyrics Sung By. Daniel Jebaraj.

Mutham Seiya Vandhirukaen Christian Song Lyrics in Tamil

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரே
என்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே

என்னை தேடோடி வந்த பாதம்
முத்தம் செய்ய வந்திருக்கேன்
மார்போடு அணைத்த கைகள்
முத்தம் செய்ய வந்திருக்கேன்
கடல் மீது நடந்த பாதம்
முத்தம் செய்ய வந்திருக்கேன்
கண்ணீரைத் துடைச்ச கைகள்
முத்தம் செய்ய வந்திருக்கேன்

பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலே
கன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே

மந்தை ஆயர்களுடனே
முத்தம் செய்ய வந்திருக்கேன்
நட்சத்திரம் பின்பற்றி
முத்தம் செய்ய வந்திருக்கேன்
சாஸ்திரிகளுடனே
முத்தம் செய்ய வந்திருக்கேன்
பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டு
முத்தம் செய்ய வந்திருக்கேன்

எங்கள் பாவம் சாபங்களை அடியோடு நீக்கிடவே
எங்கள் எல்லோரையும் இரட்சிக்கவே மரித்துயிர்க்க வந்தவரே
எங்கள் பாவம் சாபங்களை அடியோடு நீக்கிடவே
எங்கள் எல்லோரின் பிரதிநிதியாக மரித்துயிர்க்க வந்தவரே

எந்தன் பாவம் போக்க வந்தவரை
முத்தம் செய்ய வந்திருக்கேன்
சாபம் தீர்க்க வந்தவரை
முத்தம் செய்ய வந்திருக்கேன்
நீதிமான் என்றவரை
முத்தம் செய்ய வந்திருக்கேன்
ஓயாமல் நினைப்பவரை
ஓயாமல் முத்தம் செய்ய வந்தேன்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post