நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யாநீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே
1. இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்
2. குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்
3. காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
