Pavamellam Pokkidave Christian Song Lyrics
Pavamellam Pokkidave Tamil Christian Song Lyrics Sung By. Titus.
Pavamellam Pokkidave Christian Song Lyrics in Tamil
பாவம் எல்லாம் போக்கிடவே பரமன் இயேசு வந்தார்
சாபம் எல்லாம் நீக்கிடவே தம்மை பலியாய் தந்தார்
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
1. சுத்தமில்லா கஷ்டப்பட்ட குஷ்டரோகியவனை
சித்தமுண்டு சுத்தமாகு என்று இயேசு தொட்டார்
குஷ்டம் நீக்கி மேன்மையான சுகத்தினையே கொடுத்து
இஷ்டமான மனிதனாக மாற்றி வாழ செய்தார் – 2
2. சூம்பின கையுடையவனை ஆலயத்தில் கண்டு
வீம்பர் பார்த்திருக்க இயேசு கையை நீட்டு என்றார்
துன்பமான அவனுடைய கையின் தோஷம் போக்கி
இன்பமான தேறுதலை இயேசு அன்று கொடுத்தார் – 2
3. பன்னிரண்டாண்டுகள் பெரும்பாடுள்ள பெண்ணொருத்தி
அன்பர் இயேசுவின் ஆடை ஓரத்தையே தொட்டாள்
வல்லமை இயேசுவிலிருந்தே புறப்பட்டு
துல்லியமாய் அவளை குணமாக்கிற்றே அன்று – 2
4. மூச்சில்லாமல் போன மகனை சுமந்தவருடன் கூட
வீச்சில்லாமல் அழுதுகொண்டு தாயொருத்தி வந்தாள்
அழாதே என்று இயேசு பாடைதனை தொட்டு
எழாதிருந்த தனயனுக்கு திரும்ப உயிரை கொடுத்தார் – 2
5. படுக்கையிலே கிடந்தவனை கூரை திறந்து இறக்க
இடுக்கண் களையும் இயேசு அவர்கள் விசுவாசத்தை கண்டார்
அக்கணமே அவனுடைய பாவங்களை மன்னித்து
அக்களிப்புடன் படுக்கைதனை சுமந்து நடக்க செய்தார் – 2
6. தத்தி தத்தி தாவிச்செல்லும் மனித மனம் நீக்கு
நித்தம் உன்னை எச்சரிக்கும் தேவ சத்தம் நோக்கு
தேவ கோபம் மூளுமுன்னே திருந்தி வாழ பாரு
பாவம் போக்க இயேசு நாதர் பாதம் வந்து சேரு – 2
Comments are off this post