Siluvaiyil Enthan Sirumaiyai
Siluvaiyil Enthan Sirumaiyai Song Lyrics in Tamil
சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே
என் கர்த்தர் நல்லவரே-4
தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே
கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்-2
என் அப்பா நல்லவரே-4
