யெஷீவா யெஷீவா என்ற நாமம்
உனக்கும் எனக்கும் போதும் போதும்
இனிமையான நாமம் – ஒரு
இணையில்லாத நாமம்
முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள்
சொல்லிடும் அனைவரும் தொழுதிடும்
நீதியின் சூரியனே நீரே நாயகனே
ஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா
பரமனின் பிள்ளைகளை காணவே
சிலுவையில் மரித்தவரே
உயிரோடு எழுந்தவர் ஆதலால்
மரணத்தை ஜெயித்தவரே
கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
மூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா
பாரங்களை சுமந்திடும் சிநேகிதன்
பரமனின் தவ புதல்வன்
பாவங்களை அகற்றிடும் நாயகனே
மகிமையிலே முதல்வன்
ஆதியில் இருந்தவரே
ஆவியில் நிறைந்தவரே
ஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா
ஒப்புரவை உண்டு பண்ணும்
வேலையை துப்புரவாய் முடித்தவரே
முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே
ஜீவனை கொடுத்தவரே
Comments are off this post