பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் -2
பாதம் அமர்ந்திருப்பேன்-2
அதுதான் மிக நல்லது
அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் அன்பில்…
இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் -2
இலையுதிரா மரம் நான் -2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் -அபிஷேக ஒலிவமரம்…
நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் -2
பயமில்லை வெயில் காலத்தில் -2
பஞ்சத்திலே கவலையில்ல -அபிஷேக ஒலிவமரம்…




Comments are off this post