கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
தகப்பனே தகப்பனே -2
நீர் போதும் என் வாழ்வில் -4
உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர் -2
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும் -2
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் -4
துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா -2
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும் -2
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் -4
நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர் -2
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும் -2
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் -4
Comments are off this post