தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்-இயேசு -2
யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா
1. வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகளே திறந்து வழிவிடுங்கள் -2
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும் -2
யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா -2 (தலைகள் உயரட்டும்…)
2. மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடமை அன்றோ -2
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை -2
யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா -2 (தலைகள் உயரட்டும்…)
3. கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்? -2
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே -2
யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா -2 (தலைகள் உயரட்டும்…)
4. கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் -2
நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
தீர்ப்பு கூறிவிட்டார் -2
யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா -2 (தலைகள் உயரட்டும்…)
Comments are off this post