Antho Kalvari Metinil Anbulla Lyrics

Antho Kalvari Metinil Anbulla Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Antho Kalvari Metinil Anbulla Christian Song in Tamil

அந்தோ கல்வாரி மேட்டினில்
அன்புள்ள இயேசு ராஜா
தொங்கும் சிலுவை காட்சியே
தங்கும் என் சிந்தையிலே

1. கல்வாரியில் தவிக்குதே
கர்த்தாவின் சரீரமே
எந்தன் நோய் பிணி பாவங்களால்
அந்தக் கேடுற்ற தம் தேகமே

2. தேற்றிடுவார் யாருமில்லை
தன்னந் தனிமையானீர்
எந்தன் கஷ்டத்தில் துணை நிற்க
இந்த நிலைமை அடைந்தீரோ

3. காடியல்லோ தாக்கத்திற்கோ
கர்த்தாவே பெற்றுக் கொண்டார்
எந்தன் பாவத்தின் கசப்பையும்
இயேசுவே ருசித்து மாண்டீரே

4. என் ஆவியை ஒப்படைத்தேன்
எல்லாம் முடிந்த தென்றீர்
எந்தன் உள்ளத்தை உருகுதே
இந்த நல் இறுதி வாக்குகள்

5. இரட்சண்யமே சிலுவையின்
இரத்தத்தால் கண்டடைந்தேன்
நன்றி பொங்கிட நோக்கிடுவேன்
நம்பிக்கை ஈந்த என் இயேசுவே

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post