Jegamathil Uthitha Jeya Jothiye Lyrics

Jegamathil Uthitha Jeya Jothiye Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Jegamathil Uthitha Jeya Jothiye Christian Song in Tamil

ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே – நரர்
சேயர்கள் துதித்திடும் திருவடியே

பாரில் பரனாக நீரே பாவிகட்காய்ப் பலியானீர்
அன்பால் என்னை ஆட்கொண்டானே அதிரூப சுந்தரனே

1. பாவயிருள் நீக்கிப் பாரினிலே – பரன்
பாவிகள் பாவம் போக்க பலியானீரோ
சாபத்தை முற்றும் தொலைத்திடவே சக்தியாக உயிர்திட்டிரோ
அரூபா கொரூபா அற்புதனே ஆனந்த பொற்பரனே – ஜெக

2. எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ நீர்
என்தனின் சிறப்பான தாரகமே
அன்பே ஆனந்தப் பேரொளியே அதியந்தமில்லாப்பரனே
கதியே நிதியே கருணாகரா காத்திடும் புகலிடமே – ஜெக

3. ஏழையென்னில் தாகம் கொண்டதாலே – எழில்
ஏகனே எனக்கு திவ்யாகாரமே
தாகமிஞ்சி வாடுறேனையா தனியானேன் இத்தாரணியில்
காசினியில் நேசரைப் போல் காணுவேனோ கல்வாரியின் காந்தரூபா – ஜெக

4. எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன் – அண்ணல்
இயேசுவே இன்பமாக மணாளனே
கன்மலைவெடிப்பில் தங்குமென் உத்தமியே என்றழைக்கும் சத்தம்
கேட்கும் கீதம் ஆ! இன்பமே கூறிடீரோ அன்பரே – ஜெக

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post